Saturday, November 25, 2006

வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை

திருமலை மீது இன்னொரு பாடல்.
திருமலை மீட்பைப் பற்றிய பாடலிது.
இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்றது.

பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன்.


வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை
வந்திடும் எங்களின் தலைநகர் திருமலை

இடிமின்னலோடு புயல் மழைபெய்திடும்
அடிவானில் விடிவெள்ளி முகம்தந்திடும்
தெருவோரம் மீதெங்கள் உயிர்போவதோ -எம்
தமிழீழத் திசையாவும் சிவப்பாவதோ?

கோணமாமலை மீது துயர் மூண்டது
கொடியோரின் படைகள் அங்கு வந்தது
எரிகின்ற பெருந்தீயில் உடல் வெந்தது
உயிர் தின்னும் பேய்கள் நிலைகொண்டது.

நாம்வாழ்ந்த நிலமெங்கும் விசப்புற்றுக்கள்
நடமாட வழியில்லை முட்பற்றைகள்
இசையோடு தமிழ்பாடும் ஒலியில்லையே
விடிகாலைப் பொழுதங்கு இனிது இல்லையே

விழிசிந்தி நின்றோமே ஓர்விடை வந்ததோ
மொழிசொல்ல முடியாத பெருந்துயர் நின்றதோ
எழுவானில் திசைவாழ எழுந்தாடுவோம்
பொழுதோடு மண்மீது கொடி ஏற்றுவோம்

கடலின் அலைவந்து கரையில் விளையாடும்

விழியில் சொரியும் அருவிகள்

1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம்.
பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர்.
அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.

திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது.
அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான
மேஜர் தணிகைமாறன்,
மேஜர் கதிரவன்,
மேஜர் மதுசா,
கப்டன் சாந்தா.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது.
மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில்
இப்பாடல் வெளிவந்துள்ளது.


விழியில் சொரியும் அருவிகள் -எமை
விட்டுப்பிரிந்தனர் குருவிகள்
பகைவன் கப்பலை முடித்தனர் -திரு
மலையில் வெடியாய் வெடித்தனர்.
தம்பி கதிரவன் எங்கே
தணிகை மாறனும் எங்கே
மதுசாவும் எங்கே
தங்கை சாந்தா நீ எங்கே

தாயின் மடியினில் அங்கே -கடல்
தாயின் மடியினில் அங்கே

பாயும் கடற்புலியாகி வெடியுடன்
ஏறி நடந்தவரே -உங்கள்
ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக
கொடுத்தவரே
தமிழ் ஈழம் உமை மறக்காது
பகை கோண மலையிருக்காது

வேகமுடன் பெருங்கோபமுடன் பகை
வீழும் வெடியெனவானீர்
பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்
ஈரம் கசிந்திடப் போனீர்
விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி
வேகத்தில் கப்பல் விரிந்தது

நீரின் அடியினில் நீந்தி பகைவரை
தீயில் எரித்துவிட்டீரே -அவன்
ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே
ஈழம் மலர வைத்தீரே
வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்கள்
வாசலில் துயர்க் கோலங்கள்

Thagaval-Vanniyan

கடலின் அலைவந்து கரையில் விளையாடும்

தலைநகர் திருகோணமலை மீதொரு பாடல்

பாடலைப் பாடியவர் - மாவீரர் மேஜர் சிட்டு.
எழுதியது -
இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"
இசை: தமிழீழ இசைக்குழு.


கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.

கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து

கேணல் சங்கர் நினைவுப் பாடல் - 2

26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன்.


பாடியவர்: வசிகரன்
ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.

வஞ்சகர் வஞ்சனை திரண்டு வந்து
வாசலில் வெடித்த கொடுமையென்ன?
அஞ்சுபேர் உன்னுடன் நின்மனையில்
ஆகுதியான சோகமென்ன?

சங்கம் முழங்கிய திருவாயெங்கே -கேணல்
சங்கர் எனும் எம் சமர்ப்புலி எங்கே
தங்கத் தலைவன் தனிப்பலம் எங்கே -ஈழ
தமிழாள் ஈன்ற தவப்பயன் எங்கே


தலைமகன் நெஞ்சம் தவித்திடுதே -ஈழ
தமிழர்கள் நெஞ்சம் பதைத்திடுதே
அலையென திரண்டோம் மாவீரா -கண்கள்
அஞ்சலி பூவாய் மலர்ந்திடுதே

ஒருகணம் நினைந்தே உருகுகின்றோம் -உம்மை
மறுகணம் நினைத்து பொருமுகின்றோம்
கருவினில் வீரம் படைத்தவனே -உம்
கடமையை முடிக்க திரளுகின்றோம்

வஞ்சகர் வஞ்சனை வெல்லாது -நின்
வழிவரும் வரிப்புலி நில்லாது
வெஞ்சமர் களத்தில் வெற்றிபெறும் -உம்
வேள்விக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்

மாமலையொன்று மண்ணிலேஇன்று

26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.


மாமலையொன்று மண்ணிலே இன்று
சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு
தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு
வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு

சேதனை தாண்டி வந்தாடிய வானர
காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர்
சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின்
தலைவனை தாங்கிய தோழன்

முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள்
முதலோனின் நிழலாகி உறவாடினாய்
விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன்
விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய்
விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள்
தலைவனுக் குயிர் எனும் உறவு

பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த
புயலுக்கும் அசையாத மலையாகினாய்
பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான்
படையேறும் கனவோடு உயிர் போக்கினாய்
அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ
அதன்மேலே போட்டானே நெருப்பு

அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம்
அதிகாலை எனவாகும் பொழுதாகினாய்
ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ்
உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய்
நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை
நெருப்பினில் பகைவிழும் உறுதி

நெஞ்சம் மறக்குமா? -12 வேங்கைகள் நினைவாக

05.10.1987 அன்று இந்திய அரசால் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சுண்டு வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்களில் ஒன்று இது.

பாடல் வெளிவந்த ஒலிப்பேழை: புயற்கால இராகங்கள்
குரல்:தேனிசை செல்லப்பா

நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?
நெஞ்சம் மறக்குமா?

வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?
படுத்ததை நெஞ்சம் மறக்குமா?

குமரப்பா புலேந்தி அப்துல்லா
ரகு நளன் பழனி
மிரேஸ் றெஜினோல்ட் தவக்குமார்
அன்பழகன் கரன் ஆனந்தகுமார்
-(2)

எங்கள் தலைவர்கள் எங்கள் வீரர்கள்
இவர்களல்லவா"?
கண்கள் மூடி எங்கள் புலிகள் மாண்ட
கதையைச் சொல்லவா?
தங்கத் தமிழீழ விடுதலை காண
நெஞ்சம் துடித்தாரே
சிங்கள இந்திய அரசுகள் சதியால்
நஞ்சு குடித்தாரே

ஈழத்தமிழன் தமிழீழக் கடலில்
போனால் பிடிப்பாராம்
இந்திய உதவி கொண்டே தமிழனின்
வாழ்வை முடிப்பாராம்
ஆழக்கடலில் போனபுலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

ஆழக்கடலில் போன புலிகளை
பிடித்துச் சென்றாரே
அழகும் இளமையும் பொங்கும் வயதில்
துடிக்கக் கொன்றாரே

சங்கு முழங்கடா தமிழா

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தமிழர்படையின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெளிவந்த பாடலிது. பூநகரி வெற்றி பற்றி எழுதப்பட்ட பதிவு: தவளைப் பாய்ச்சல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: பூநகரி நாயகர்
பாடியவர்கள்: சாந்தன், மற்றவர் யாரென்று தெரியவில்லை.


சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
சங்கு முழங்கடா தமிழா -இந்த
சாதனை பாடடா கவிஞா
பொங்கும் புலிகளின் போர்த்திறன் பாடியே
பூநகர் வெற்றியை வாழ்த்துங்கடா

நாகதேவன்துறை வேகப்படகுகள்
நம்கையில் வந்ததடா -பகை
ஏவியபீரங்கி யாவுமே எங்களின்
காலிற் கிடக்குதடா -அட
பாயும் புலிகளின் கையில் எதிரியின்
பாசறை வீழ்ந்ததடா -காற்றில்
பஞ்சுப்பறந்தது போலப் பறந்தது
வந்த படைகளடா.

சிங்களம் இங்கினி பொங்குமா -வந்தினி
செந்தமிழ் ஈழத்தில் தங்குமா -இனி
தங்குலமை இங்கு தோற்குமா -கரி
காலனின் சேனைகள் தோற்குமா -புது
விந்தைகள் ஆயிரம் சேர்ந்ததடா -புலி
வீரத்தினில் வேரினில் பூத்ததடா -எங்கள்
பொங்கிடும் பூமியைப் பாடுவோம் -பிர
பாகரன் காலமென்றாடுவோம்.

எங்கள் தோழர்களின் புதைகுழியில்

'புயற்கால இராகங்கள்' என்ற இசைப்பேழையில் தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் இது.

எங்கள் தோழர்களின் புதைகுழியில்
மண்போட்டுச் செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி -தமிழ்
ஈழம் மீட்பது உறுதி

இளமைநாளின் கனவையெல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்
கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்

வாழும்நாளில் எங்கள் தோழர்
வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம்
தோழர் நினைவில் மீண்டும் தோளில்
துப்பாக்கிகளை அணைக்கின்றோம்

தாவிப்பாயும் புலிகள்நாங்கள்
சாவைக்கண்டு பறப்போமா?
பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்
போனவழியை மறப்போமா?

வெற்றி பெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடப்பட்ட பாடலிது.

ஒலிவடிவில் - வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்


வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்.

Tuesday, August 01, 2006

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்

01.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினருக்கு எதிரான மூன்றாவது வலிந்த தாக்குதலான ஓமந்தைப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது களத்தில் வீரச் சாவடைந்த விட்டார் சிட்டு(மேஜர் சிட்டு) என்ற அருமையான போராளிப் பாடகனை அறிமுகப்படுத்திய பாடலிது. ஏறத்தாழ 75 பாடல்களைப் பாடியிருக்கிறார் சிட்டு.

பாடலை எழுதியது இன்னொரு போராளிக்கலைஞன் மேஜர் செங்கதிர்.

கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல் தமிழீழக் கோலங்கள்

உண்ணாமல் உறங்காமல் உயிர்காக்கும் வீரர்கள்
மண்ணோடு எருவாகி மண்மீட்கும் போராட்டம்

கண்ணாண சுதந்திரத்தை விற்றுக்காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை என்னாளும் நிலைக்காது

என்னவளம் இல்லை தமிழீழமதில்
ஏனஞ்சி வாழவேணும் சிங்களத்தில்
ஒன்றுபடு தமிழினமே போரிட நீ -இனி
ஓடட்டும் எதிரிபடை மண்ணை விட்டு

Monday, July 31, 2006

என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா

பாடியவர் - இராசேந்திரம்
பாடல் வரிகள் - முல்லைச் செல்வன்
இசை - தமிழீழ இசைக்குழு


என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா
எதிரி காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா
அன்னை மண்ணைக் காத்திட உன்மனம் தயக்கமா
அஞ்சி நீயும் வாழ்வதால் தமழினம் மதிக்குமா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

தாய் கொடுத்த பால் உனக்கு வீரம் ஊட்டவில்லையா
தாயகத்தைக் காத்திடத் தயக்கமென்ன சொல்லடா
பேய்கள் உந்தன் ஊரெரித்து நாசம் செய்ய விடுவதா
பேடி போல ஓடி ஓடி உரிமை கெட்டுச் சாவதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

உயிரினும் அரியதெங்கள் மானம் என்று எண்ணடா
உறுதியுள்ள தமிழனாக உன்னை ஆக்கிக் கொள்ளடா
இமயம் தன்னில் கொடியை நாட்ட மறவர் பிள்ளை அல்லவா
இன்னும் இங்கு பூனை போல இருக்கும் எண்ணம் நல்லதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

விதைகளாக வீழ்ந்து நிற்கும் வேங்கைகளைப் பாரடா
விடுதலைக்கு உதவிடாமல் விலகி ஓடல் ஏனடா
அடிமை வாழ்வில் முடி வணங்கி தமிழினமே சாவதா
அறிவு அற்ற மனிதனாக அவல வாழ்வு வாழ்வதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா

பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல்.

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்
புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்
நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்
தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்
மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல
மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை
செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள
மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா
மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக
தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது
தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது.

Sunday, July 30, 2006

தங்கையரே தம்பியரே நீங்கள்

பாடியவர் - இன்பநாயகி
வரிகள் - முல்லைச் செல்வன்
இசை - தமிழீழ இசைக்குழு

தங்கையரே தம்பியரே நீங்கள்
சிந்திக்கும் நேரமிது - கொடும்
சிங்கப் படையை செங்களத்தில்
சந்திக்கும் காலமிது
எங்களினம் வாழ்ந்திடவே
பங்கமது நீங்கிடவே
பொங்கி எழுந்திடு பூகம்பமாகவே
சிங்கப் படை எங்கள் தேசம் விட்டோட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

தங்கத் தலைவனின் பாதையிலே
தாயக பூமியை மீட்டிடுவோம்
எங்கும் உரிமைப் புரட்சி வெடித்திட
ஈழச் சுதந்திரம் காத்திடுவோம்
மங்கள கீதம் நம் மண்ணில் ஒலித்திட
மாறா உறுதியில் நாமும் போராடிட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து போராடணும்
ஆதிக்கப் பேய்களும அஞ்சியே ஓடணும்
வீட்டுக்கு வீடிங்கு வேங்கையாய் மாறணும்
வெங்களமாடியே விடுதலை தேடணும்
மானத் தமிழ்க் கொடி வானில் பறக்கணும்
மாவீரர் கனவினை நாம் நனவாக்கணும்

தங்கையரே தம்பியரே நீங்கள்...

பாலத்தில் காலத்தை ஓட்டுவதா - தமிழ்
ஈழத்தைச் சிங்களம் ஆட்டுவதா
வீரம் மானம் இல்லாக் கோழையென்று
எதிர் காலம் உம்மைப் பழி சாட்டுவதா
நாளை நமக்கொரு நாடு மலர்ந்திட
நாடி ஓடிக் களம் ஆடிக் களித்ததிட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்



பார்வதி சிவபாதம்



காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்


எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா

காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

எந்தையர் ஆண்டதின் நாடாகும்

குரல் - பாடகர் சாந்தன்

எந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை
எதிரிகள் ஆள்வது கேடாகும்
வந்துநீ களத்தினில் போராடு -அடிமை
வாழ்விலும் சாவது மேலாகும்

மீனினம் பாடிடும் தேனாடு -வரை
விண்முட்டும் சீர்திரு மலைநாடு
மானினம் வாழ்முல்லை வளக்காடு -வயல்
வன்னியும் எங்களின் மண்ணாகும்

முத்துக்கள் விளைகடல் மன்னாரும் -தம்பி
முத்தமிழ் புலமைசேர் யாழ்நாடும்
சொத்தென நிறைபுகழ் தமிழீழம் (2)-இதில்
தொல்லைகள் மேவினால் என்னாகும்

சிங்களர் காலடி படலாமோ -ஈழம்
சீர்கெட தமிழர்கள் விடலாமோ
சொந்த மண் அழிந்ததன் பின்னாலே(2) -பிறர்
சோற்றுக்கு வாழ்வதோ வாழ்வாகும்

கொலையோடு கொள்ளைகள் செய்வார்கள் -பெரும்
குண்டினை மழையென பெய்வார்கள்
தலையோடு மனைகளும் பாழாக(2) -தீயில்
கருக்குவர் ஒவ்வொரு நாளாக

தாயகம் மீட்டிட நீயோடு -பிரபா
தானையில் சேர்ந்தொரு புலியாகு
போயினி செருவினில் விளையாடு (2)-தமிழ்
பூத்திட புதியதோர் புறம்பாடு
புறம்பாடு.. புறம்பாடு.. புறம்பாடு....

எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா

குரல் - பாடகர் சாந்தன்

எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா
தமிழ்மக்கள் அறிவென்ன சாலமே குருடா
தன்தாயை விற்றிட்ட கொடியோர்கள் வாழவா
தலைவனின் ஆணைகொள் புலியே நீ ஆளவா

போடு போடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

சங்கத்தமிழ் கண்டோன் தமிழ்வீரன் அல்லனா
இமையத்தில் புலிநட்டோன் தமிழ்வீரன் அல்லனா
ஈழத்தை மீட்பவன் தமிழ்வீரன் அல்லனா
இனிவேறு புறமொன்று நானிங்கு சொல்லவா

போடுபோடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

ஓட்டிகளே படகோட்டிகளே

குரல் - மாவீரன் மேஜர் சிட்டு
கடலில் புலிகளுக்காகப் படகோட்டி,
கொல்லப்பட்ட படகோட்டிகள் நினைவாக எழுந்த பாடல்.

ஓட்டிகளே படகோட்டிகளே -எங்கள்
உணர்வினுக்கே வழிகாட்டிகளே

வானில் நிலாவரும் காலத்திலும் - கரும்
மேகம் உலாவரும் நேரத்திலும் -குளிர்
வாடையடிக்கின்ற காலத்திலும் -புயல்
வந்து அழிக்கின்ற நேரத்திலும்
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

ஆயுதங்கள் கொண்டு தந்தீரே -ஏதும்
ஆகாமல் கரை வந்தீரே - உயிர்
போகாமல் எம்மை காத்தீரே -நாங்கள்
போராட வலு சேர்த்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

சாவுக்கு நீரஞ்சி நிற்காமல் -உங்கள்
தாய்பிள்ளை தாரத்தை எண்ணாமல் -தமிழ்
ஈழத்தின் விடிவிற்காய் வாழ்ந்தீரே -அலை
ஏறும் கடல்மடி பாய்ந்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

Thursday, July 27, 2006

யாரென்று நினைத்தாய் எம்மை

பாடல் எழுதியவர்: மறைந்த கவிஞர் நாவண்ணன்.
பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன்.

யாரென்று நினைத்தாய் எம்மை
ஏன்வந்து அழித்தாய் மண்ணை
போரென்றா எழுந்தாய் வந்து
புலிகாலில் விழுந்தாய் பணிந்து

கண்டிவீதி நீபிடித்து கைகுலுக்கவோ -முன்னர்
ஆண்டிருந்த நிலமுழுதும் நாமிழக்கவோ (2)
தாண்டிக்குளம் மேலே மேகம் இடியிடித்தது -எல்லை
தாண்டிவந்து நின்றவர்க்கு உயிர் துடித்தது

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு
வருவாயா அனுருத்த நம்பி

கொண்டுவந்து ஆயுதங்கள் நீகுவிப்பதோ -நாளும்
குண்டுகளால் எங்கள்தேசம் தீக்குளிப்பதோ (2)
கோபம் கொண்ட வேங்கைள் களங்களாடினர் -தாண்டிக்
குளத்தில் நின்ற பகைவர்கள் பிணங்களாயினர்

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு
வருவாயா அனுருத்த நம்பி

திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன்

10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.

திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன் -எங்கள்
சாதுரியன் யாழினியும் உயிர் கொடுத்தனர்
பெருவிழியில் கனல்சுமந்து இவர் நடந்தனர் -தாண்டிக்
குளமிருந்த பகைமுடித்து இவர் விழுந்தனர்

நெருப்பென நிமிர்ந்தவர் இருப்பது அழித்திட
எழுந்தவர் படையினை உடைத்தனர் -உயர்
கரும்புலியாகியே களத்திடை ஆடியே
கயவர்கள் தங்ககம் தகர்த்தனர் -வெடி
மருந்துடன் தம்முடல் வெடித்தனர்

சந்ததி காத்திட கந்தகம் சுமந்திவர்
சாவினை நெஞ்சினில் -இவர்
சந்தன மேனிகள் வெந்திடும் போதிலே
சிந்தையில் தலைவனை நினைத்தனர்
தமிழ் தேசத்தின் புயலென நிலைத்தனர்

quelle-eelapadalkal

தம்பி நிதனோடு தங்கை யாழினி

10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.

தம்பி நிதனோடு தங்கை யாழினி -எங்கள்
சாதுரியன் பெயரைச் சொல்லி பாடுநீ

பொங்கிக் கரும்புலிகளாகி வெடிகளானவர் -பிற
பெரிய நெருப்பாகி எரிந்துபோனவர்

வன்னிமண்ணை சிறைபிடிக்க எண்ணிவந்த பகைவனுக்கு
வாசலிலே விழுந்ததடா முதலடி -தலைவன்
சொன்னபடி கரும்புலிகள் மின்னலென பாய்ந்து -ஜெய
சிக்குறுக்குக் கொடுத்த அடி பதிலடி

செந்தமிழர் வீதியிலே வந்துநின்ற எதிரிகளை
தேடித்தேடி அடிகொடுத்தார் யாழினி -எங்கள்
தம்பி நிதனோடு பொங்கி சிங்களத்துப் படைகளுக்கு
சாதுரியன் அடிகொடுத்தான் பாடுநீ

கரியவேங்கை வெடிசுமந்து திரியும்வரை பகைவனது
கால்கள் இந்த மண்ணில் படமாட்டுதே -இங்கு
விரியும் சிறு மலர்கள்கூட கரியபுலியாகி நின்று
விடுதலைக்க ஒளிகொடுத்துக் காட்டுமே

Quelle - eelapadalkal

Wednesday, July 26, 2006

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

குரல் - திருமலைச்சந்திரன்
'மறைமுகக் கரும்புலிகள்' பற்றிய ஒரு பாடல்

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து
வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று
வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று
வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று

தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம்
வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம்
வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி
நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை
விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை
சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள்
சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள்
வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை
காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை

மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள்
மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது
வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த
செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு
வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா

பாடல்வரிகள் - புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு - முரளி.


ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளி வந்த பாடல். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல்.

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா
ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா -இப்போ
ஆனையிறவு எங்களிடம் நந்தலாலா

எந்த மாதிரி அட அந்தமாதிரி
எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ்
ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி
சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -எதோ
தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி
இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட
சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி

ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ
உள்ளதையும் தந்து போறா நந்தலாலா
மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப
மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா

அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ
ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா
அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள்
அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா

இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ
இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா
எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள்
தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா

Tuesday, July 25, 2006

அடைக்கலம் தந்த வீடுகளே

குரல்: மலேசியா வாசுதேவன்
இசை: தேவேந்திரன்
இசைத்தட்டு: களத்தில் கேட்கும் கானங்கள்

இராணுவ முற்றுகைக்குள்ளும் சுற்றிவளைப்புக்குள்ளும் தங்களைப் பொத்திப் பாதுகாத்தவர்ககளிடமிருந்து விடைபெறும் போது புலிவீரன் பாடுவதாக அமைந்த பாடல்.

அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்
அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்
கதவு திறந்தீர்களே -எம்மை
தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி
பார்க்க மறந்தீர்களே
பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி
உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்
தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா
நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த
இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்
முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்
சிறகால் மறைத்தீர்களே
சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே...

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன்

மறைமுகக் கரும்புலிகள் பற்றிய பாடல்

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு
வாழும் தலைமுறை சாகும் கரும்புலி
வாழ்வை அறிவதுமில்லை -இவர்
வாசம் புரிவதுமில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு
தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்
மூச்சும் பெரும் புயலாகும்.

காந்தரூபன் வாழுகின்ற கடலிது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடத்திய காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகியோரையும், அதன்பின் வேறொரு தாக்குதலில் வீரச்சாவடைந்த சிதம்பரம், ஜெயந்தன் ஆகியோரையும் நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடல். நெய்தல் இசைநாடாவில் இடம்பெற்றது இப்பாடல். 1991ஆம் ஆண்டு (10.07.1990) முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

காந்தரூபன் வாழுகின்ற கடலிது
கொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இது
நீந்தி வினோத் ஆடிநின்ற அலையிது
ஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்கு
விலையேது விலையேது

புதிய வரலாறு எழுதும் புலிவீரர்
புகழை உலகெங்கும் கூவு -அவர்
உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி
உரத்த குரலெடுத்து பாடு பாடு பாடு

எதிரி வருவானா கரையைத் தொடுவானா
என்று புயலாகி நின்றோம் -புலி
அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும்
அணியில் துணையாகி வென்றோம்
உலகத் திசையாவும் தமிழன் அரசாளும்
நிலைமை வருமிங்கு ஒருநாள் -கடல்
புலிகள் படைசென்று பகைவர் படைவென்று
புலரும் தினமன்று திருநாள்

கடலின் கரையோரம் தலைவன் உருவாகி
கால்கள் நடைபோட வந்தான் -பெரும்
தடைகள் எதுவந்த போதும் அவன்காலில்
உடையும் எனச்சொல்லி வென்றான்
பூவும் புயலாகி பாயும் புலியாகி
போரில் குதித்துள்ள நாடு -தமிழ்
ஈழம் உருவாகும் வேளை இதுவாகும்
என்று களம்நோக்கி ஓடு

மறவர் படைதான் தமிழ்ப்படை

வரிகள் : காசி ஆனந்தன்

மறவர் படைதான் தமிழ்ப்படை -குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்
வெல்வார் என்பது வெளிப்படை

புதிதோ அன்று போர்க்களம் -வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் -கவி
பாடிமுடிப்பார் மங்களம்

சிரிக்கும் உள்ளம் போர் கண்டு -தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு -என
துள்ளும் நாக்கும் இருதுண்டு

தமிழன் பண்பில் உருப்படி -அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையம் தன்னை முதற்படி -பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு -நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு -கண்
சிவந்து நின்று போராடு

Friday, June 09, 2006

நீலக்கடலேறி வந்து மேனிதொடும்

குரல் - மேஜர் சிட்டு

நீலக்கடலேறி வந்து மேனி தொடும் காற்று -வான்
மீதுநிலா பால் சொரியும் நேரம் வலையேற்று
ஈழக்கடல் மீதில் எங்கும் இன்பநிலை ஆச்சு -அலை
ஏறி வந்து கொன்ற பகை இன்று தொலைந்தாச்சு

வலையை வீசடா -கடல்
அழகைப் பாரடா -கடல்
புலிகள் தந்த வாழ்க்கையென்று
வாழ்த்துப் பாடடா

காலை விடிகின்ற வரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர் தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
நாங்கள் கரையேறுமட்டும் பார்த்திருப்பார் பெண்கள்
வேங்கைகளை நம்பியிங்கு தூங்குதவர் கண்கள்

இந்த ஊரறியாதெங்கள் வேதனை -நாங்கள்
உண்பதுக்கெத்தனை சோதனை... சோதனை


பாய்விரித்து ஓர் இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதையா ஏன் திரும்பவில்லை
சிங்களத்துப் பேய்களினால் பிள்ளையுயிர் போச்சு
சந்ததிக்கு வாய்த்த உடல் மீனுக்கிரையாச்சு

இது சோகங்கள் தாங்கிய தேகங்கள் -இன்று
சொந்தங்கள் வந்தால் சந்தோசங்கள்


அச்சமின்றி கடலில் ஏறி வாழ வைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்
போரில் வெற்றி காணவேண்டும் நாளை இந்தஉலகில்

நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள் -பிர
பாகரன் காலத்தைப் பாடுங்கள்... பாடுங்கள்

Sunday, June 04, 2006

தாயக மண்ணின் காற்றே என்னில்

பாடியவர் - வர்ண.இராமேஸ்வரன்
கரும்புலிகள் இசைநாடாவில் இடம்பெற்றது



தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா -நான்
சாகும்நேரம் கடலே நீயும் மூசம்மா
போரிற் குதித்த தாயகமண்ணே நீயும் பேசம்மா -கரும்
புலியிவன் பாடும் பாடலை எங்கும் பாடம்மா


நாளையிந்த நாட்டையாளும் சின்னப் பூக்களே -நீங்கள்
நம்பவேண்டும் நாளை தமிழ்ஈழமென்றுமே
நீங்கள் வாழ வேண்டுமென்றே நான் வெடிக்கிறேன் -மாமன்
நெஞ்சிலுள்ள கனவுகளைத் தான் படிக்கிறேன்
சின்ன சின்ன பூக்களெல்லாம் வாருங்கள் -தமிழ்
தேசம் வெல்ல வேண்டுமென்று சேருங்கள்

நேற்று வரை அடுப்படியில் நீ உறங்கினாய் -உந்தன்
நீளவிழி மை கரைய நீ கலங்கினாய்
ஆற்றலுள்ள தலைவன் வழி காட்டி நிற்கிறான் -எந்தன்
அன்புத் தங்கை அச்சமில்லை என்றெழும்புவாய்
உங்களுக்காய் இன்று போரைத் தொடுக்கிறேன் -இந்த
ஊருலகம் அறியாமல் வெடிக்கிறேன்.

அகதியாகி உலகமெங்கும் அலையும் தோழனே -எங்கும்
அச்சத்தோடு ஒதுங்கி வாழும் எந்தன் நண்பனே
பிச்சையேற்று அடிமையாகி வாழும் வாழ்வினை -தூக்கிப்
போட்டெரித்து விட்டெழும்பு புலிகள் சேனையில்
மானமதே வாழ்வு தரும் என்றறிந்திடு -வெடி
மருந்துடனே நான் புகுந்தேன் கண் திறந்திடு

Monday, May 29, 2006

ஆண்டாண்டு காலமதாய் நாம்

பாடியவர் - குட்டிக் கண்ணன்
இசை - தமிழீழ இசைக்குழு
வரிகள் - முல்லைச்செல்வன்

ஆண்டாண்டு காலமதாய் நாம்
ஆண்டு வந்த பூமி
அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி
சுத்தி வந்த வீதி
எங்கள் அக்கா அண்ணையரே
எதிரி இங்கு வரலாமா
எங்கள் மண்ணை ஆள நினைச்சா
வேங்கை நாங்க விடலாமா

(ஆண்டாண்டு)

வீட்டுக்கொரு வீரன் போனா
விடுதலையும் நாளை வரும்
வீதியிலே சுத்தித் திரிஞ்சா
அடிமையாகச் சாக வரும்
ஆட்டம் போடும் ராணுவங்கள்
அலறி ஓடணும் . நாம்
அடிமை இல்லை என்று புதிய
பரணி பாடணும்

(ஆண்டாண்டு)

எங்கள் வேங்கைத் தலைவன் தானே
எங்களுக்கு வழிகாட்டி
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடுவோம் தீ மூட்டி
பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு
புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு

(ஆண்டாண்டு)

என்னினமே என் சனமே
இன்னும் என்ன மயக்கமா
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடவே தயக்கமா
பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை
பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா

(ஆண்டாண்டு)

Sunday, May 28, 2006

அடிபணிந்து வாழ்வதோ ...

வரிகள் - முல்லைச்செல்வன்
பாடியவர் - தேவா சங்கர்
இசை - தமிழீழ இசைக்குழு

அடிபணிந்து வாழ்வதோ
முடிவணங்கி வீழ்வதோ
துடிதுடிக்கும் கரங்கள் இங்கு
துவண்டு கிடப்பதோ...
முடிவெடுக்கும் மனங்கள் இங்கு
மருண்டு தவிப்பதோ...

(அடிபணிந்து)

எதிரி உடல் இரும்பா - உன்
இதயம் என்ன துரும்போ - சொல்
உயிரும் என்ன கரும்பா - நீ
உணர்ந்து பாரு தமிழா
போன காலங்கள் போகட்டும் - இனி
புதிய வரலாறு படைப்போம்
எழுந்திடு துணிந்திடு போர் புரிந்திடு

(அடிபணிந்து)

கையில் என்ன விலங்கா - நீ
காட்டில் வாழும் விலங்கா - சொல்
வையகத்தில் கலங்கா நீ
வாடலாமோ தமிழா
வீர வரலாறு படைத்திடும் - நம்
வேங்கை அணியோடு இணைவேம்
வெற்றித் திருநாடு அமைத்திட - நாம்
யுத்த களமாடி ஜெயிப்போம்
எழுந்திடு துணிந்திடு போர் புரிந்திடு

(அடிபணிந்து)

Saturday, May 20, 2006

புலியொரு காலமும் பணியாது

வரிகள்: பொன். கணேசமூர்த்தி
பாடியவர்: மேஜர் சிட்டு

இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.

புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது
திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது -எங்கள்
நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை
எம்மை ஆளவென்று சதிபோடும்
முள்ளை மலரென்று கதைபேசும் -சில
மந்திகள் கொடிதாவும்
கொட்டிலுக்கு கூரையில்லை
கொண்டுவந்த தேதுமில்லை
கட்டுதற்கு ஆடையில்லை
மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை
வாவா... -இனி
குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்
பறிப்போம் திடமாய் நடைபோடு
மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி
மலந்திடும் கூத்தாடு
நாம் பிறந்த ஊருமில்லை
நட்டுவந்த தேதுமில்லை
ஆதரவுக்காருமில்லை
ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்
வாவா... -இனி
சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்
களத்தில் கயவரது தேரோட்டம்
மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி
மறுபடி கொடியேற்றும்
பள்ளியில்லை தேதியில்லை
சொல்லியள யாருமில்லை
உள்ளமின்றி மிச்சம் இல்லை
உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு
வாவா... -எங்கள்
ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா.

சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்

குரல்கள் : மேஜர் சிட்டு, சுகுமார்

யாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது.

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள்
வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்
எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ்
ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்
வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்
பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள்
பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே


Quelle - வன்னியன்

கடலின் காற்றே கடலின் காற்றே

பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், மேஜர் சிட்டு.
இசை: முரளி


இது கொழும்புத் துறைமுகத்தில் 1996 ஆம் ஆண்டு கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

கடலின் காற்றே கடலின் காற்றே
எரியும் புலியைத் தழுவிவிடு
உயிரைக் கரைக்கும் புலிகள் மூச்சை
கரையை நோக்கி உலவவிடு

குனியாது கடல்வேங்கை ஒருநாளும் -வைத்த
குறியேதும் தறவாது இடிவீழும்
பணியாது தமிழ் ஈழம் போராடும் -எங்கள்
பகைமீது இனிமேலும் இடிவீழும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


ஊரிலிருந்து வேரையறுத்து
உறவைக் கலைத்த முகத்திலே
காறியுமிழ்ந்தேறி மிதித்தார்
அவர்கள் துறை முகத்திலே
கரிய புலிகள் இனியும் புதிய
சரிதம் எழுதும் பொழுதிலே
கடலின் புலிகள் படகில் எழுந்தார்
பகைவன் சாவின் விளிம்பிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

தலைவன் காட்டும் வழியில் நடந்து
கடலின் வேங்கை விரைந்திடும்
தமிழர் தேசம் விடியும் வரையும்
கரிய புலிகள் உருகிடும்
உலகம் முழுதும் புருவம் உயர
கடலின் புலிகள் நடந்திடும்
தமிழன் நிலத்தை அழிக்கும் பகைவன்
உயிரை புலிகள் குடித்திடும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும்
குகையில் வீழ்ந்த ஒரு அடி
குளறக் குளறக் கடலின் புலிகள்
கொழும்பில் இடிக்கும் பலஇடி
கடலின் புலிகள் எழுவார் எனிலோ
திசைகள் முழுதும் காலிலே
இனிமேல் அதிரும் வெடிகள் முழுதும்
பகைவன் ஊரின் தோளிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


Quelle - வன்னியன்

Friday, May 19, 2006

போரம்மா... உனையன்றி யாரம்மா

இப்பாடல் பார்வதி சிவபாதம், குமாரசாமி ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது


போரம்மா
உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்
ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்
ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்
ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு
வீசும் காற்றின் வேகம் கொண்டு
மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா
மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்
மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு
விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி
ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா

Wednesday, February 22, 2006

குக்கூக் குக்கூக் குயிலக்கா ...

வரிகள் - முல்லைச்செல்வன்
பாடியவர் - குட்டிக்கண்ணன்
இசை - தமிழீழ இசைக்குழு


குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா


இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்
வீரத்தையே தினம் பாடு

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி
வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்
வீரத்துக்கே இணையில்லை - இதை
நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி
கொஞ்சும் குரல்தனில் பாடக்கா


குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது
எங்கள் புலி பயந்தாரா - கொண்ட
இலட்சியத்தை மறந்தாரா - அவர்
சத்தியம் காக்க யுத்தம் புரிந்த
சங்கதியைத் தினம் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

காலைப் பொழுதினில் சோலை நடுவினில்
கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப
இராகம் இனிக்கும் உன் குரலக்கா
நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்
நாலு திசை எட்டப் பாடக்கா

குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ
கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா

Wednesday, February 15, 2006

மண்ணில் விளைந்த முத்துக்களே...

பாடல் வரிகள் - காந்தன்
பாடியவர் - ஹரிகரன்


மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா
இதயம் முழுதும் அழுவதால்
விழியில் நீரடா
விழையும் பயிர்கள் அழிவதால்
மனதில் நோயடா
விந்தைதானடா

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா

சந்தனப் பேழையிலே
உறங்கிடும் தோழனே
எனக்குன் துணிவைத் தா
எனக்குன் புடவை தா

அண்ணன் தம்பி ஆகி விட்டோம்
அப்பு ஆச்சி ஆசிப் பட்டோம்
ஆயுதங்கள் ஏந்தி விட்டோம்
ஆனவரை பார்த்திடுவோம்

காலம் வரட்டும் காத்திருப்போம்
காதில் சங்கொலி கேட்டிருப்போம்
போ.. வந்தால் போர் தொடுப்போம்
சாதல் என்றால் பேர் கொடுப்போம்
இனி நாளை நாம்தான் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா


சிறைகளில் இருந்ததும்
தலைகளை இழந்ததும்
விடுதலை அடையவே
நினைத்தது நடக்கவே

உங்கள் அடிச்சுவட்டிலே
எங்கள் வழி இருக்குது
எதிரிகள் தெரியுது
எண்ணங்கள் புரியுது

தீரம் என்றென்றும் ஒய்வதில்லை
வெற்றி என்பது தூரமில்லை
நாளை என்பது நம் கையிலே
நாடு என்றென்றும் நம் கண்ணிலே
புது வாழவே காண்போம் வா

மண்ணில் விளைந்த முத்துக்களே
மரணம் ஏதடா
கண்ணில் விழுந்த இரத்தத்திலே
கவிதை பாடடா
இதயம் முழுதும் அழுவதால்
விழியில் நீரடா
விழையும் பயிர்கள் அழிவதால்
மனதில் நோயடா
விந்தைதானடா