Monday, July 31, 2006

என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா

பாடியவர் - இராசேந்திரம்
பாடல் வரிகள் - முல்லைச் செல்வன்
இசை - தமிழீழ இசைக்குழு


என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா
எதிரி காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா
அன்னை மண்ணைக் காத்திட உன்மனம் தயக்கமா
அஞ்சி நீயும் வாழ்வதால் தமழினம் மதிக்குமா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

தாய் கொடுத்த பால் உனக்கு வீரம் ஊட்டவில்லையா
தாயகத்தைக் காத்திடத் தயக்கமென்ன சொல்லடா
பேய்கள் உந்தன் ஊரெரித்து நாசம் செய்ய விடுவதா
பேடி போல ஓடி ஓடி உரிமை கெட்டுச் சாவதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

உயிரினும் அரியதெங்கள் மானம் என்று எண்ணடா
உறுதியுள்ள தமிழனாக உன்னை ஆக்கிக் கொள்ளடா
இமயம் தன்னில் கொடியை நாட்ட மறவர் பிள்ளை அல்லவா
இன்னும் இங்கு பூனை போல இருக்கும் எண்ணம் நல்லதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

விதைகளாக வீழ்ந்து நிற்கும் வேங்கைகளைப் பாரடா
விடுதலைக்கு உதவிடாமல் விலகி ஓடல் ஏனடா
அடிமை வாழ்வில் முடி வணங்கி தமிழினமே சாவதா
அறிவு அற்ற மனிதனாக அவல வாழ்வு வாழ்வதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

No comments: