Monday, July 31, 2006

என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா

பாடியவர் - இராசேந்திரம்
பாடல் வரிகள் - முல்லைச் செல்வன்
இசை - தமிழீழ இசைக்குழு


என்னடா இளைஞனே இன்னும் என்ன அச்சமா
எதிரி காலில் அடிமையாய் வாழ்வதுதான் சொர்க்கமா
அன்னை மண்ணைக் காத்திட உன்மனம் தயக்கமா
அஞ்சி நீயும் வாழ்வதால் தமழினம் மதிக்குமா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

தாய் கொடுத்த பால் உனக்கு வீரம் ஊட்டவில்லையா
தாயகத்தைக் காத்திடத் தயக்கமென்ன சொல்லடா
பேய்கள் உந்தன் ஊரெரித்து நாசம் செய்ய விடுவதா
பேடி போல ஓடி ஓடி உரிமை கெட்டுச் சாவதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

உயிரினும் அரியதெங்கள் மானம் என்று எண்ணடா
உறுதியுள்ள தமிழனாக உன்னை ஆக்கிக் கொள்ளடா
இமயம் தன்னில் கொடியை நாட்ட மறவர் பிள்ளை அல்லவா
இன்னும் இங்கு பூனை போல இருக்கும் எண்ணம் நல்லதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

விதைகளாக வீழ்ந்து நிற்கும் வேங்கைகளைப் பாரடா
விடுதலைக்கு உதவிடாமல் விலகி ஓடல் ஏனடா
அடிமை வாழ்வில் முடி வணங்கி தமிழினமே சாவதா
அறிவு அற்ற மனிதனாக அவல வாழ்வு வாழ்வதா
சொல்லடா... சொல்லடா... சொல்லடா...

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா

பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல்.

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்
புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்
நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்
தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்
மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல
மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை
செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள
மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா
மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக
தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது
தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது.

Sunday, July 30, 2006

தங்கையரே தம்பியரே நீங்கள்

பாடியவர் - இன்பநாயகி
வரிகள் - முல்லைச் செல்வன்
இசை - தமிழீழ இசைக்குழு

தங்கையரே தம்பியரே நீங்கள்
சிந்திக்கும் நேரமிது - கொடும்
சிங்கப் படையை செங்களத்தில்
சந்திக்கும் காலமிது
எங்களினம் வாழ்ந்திடவே
பங்கமது நீங்கிடவே
பொங்கி எழுந்திடு பூகம்பமாகவே
சிங்கப் படை எங்கள் தேசம் விட்டோட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

தங்கத் தலைவனின் பாதையிலே
தாயக பூமியை மீட்டிடுவோம்
எங்கும் உரிமைப் புரட்சி வெடித்திட
ஈழச் சுதந்திரம் காத்திடுவோம்
மங்கள கீதம் நம் மண்ணில் ஒலித்திட
மாறா உறுதியில் நாமும் போராடிட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து போராடணும்
ஆதிக்கப் பேய்களும அஞ்சியே ஓடணும்
வீட்டுக்கு வீடிங்கு வேங்கையாய் மாறணும்
வெங்களமாடியே விடுதலை தேடணும்
மானத் தமிழ்க் கொடி வானில் பறக்கணும்
மாவீரர் கனவினை நாம் நனவாக்கணும்

தங்கையரே தம்பியரே நீங்கள்...

பாலத்தில் காலத்தை ஓட்டுவதா - தமிழ்
ஈழத்தைச் சிங்களம் ஆட்டுவதா
வீரம் மானம் இல்லாக் கோழையென்று
எதிர் காலம் உம்மைப் பழி சாட்டுவதா
நாளை நமக்கொரு நாடு மலர்ந்திட
நாடி ஓடிக் களம் ஆடிக் களித்ததிட

தங்கையரே தம்பியரே நீங்கள்...

எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது

பாடியவர்கள்: சாந்தன், பார்வதி சிவபாதம்



பார்வதி சிவபாதம்



காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்
காதோரம் ஒரு சேதி சொல்வோம் -(2)
கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்
புரியாத புதிராகச் சென்றோம்


எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி
இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்
காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்

வாழும்போது மானத்தோடு
வாழ்பவன்தானே தமிழன் -தன்
வாசலில் அடிமை சேகவம் செய்து
வாழ்பவன் என்ன மனிதன்
வழியில் இடறும் பகைகள் எரிய
வருக வருக தமிழா -(2)
உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து
வெளியில் வருக தமிழா

காற்றும் நிலவும் யாருக்கெனினும்
கைகள் கட்டுவதில்லை - நாங்கள்
போகும் திசையில் சாகும்வரையில்
புலிகள் பணிவதுமில்லை
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்
முளைப்போம் இந்த மண்ணில் -(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து
மூட்டும் தீயைக் கண்ணில்

எந்தையர் ஆண்டதின் நாடாகும்

குரல் - பாடகர் சாந்தன்

எந்தையர் ஆண்டதின் நாடாகும் -இதை
எதிரிகள் ஆள்வது கேடாகும்
வந்துநீ களத்தினில் போராடு -அடிமை
வாழ்விலும் சாவது மேலாகும்

மீனினம் பாடிடும் தேனாடு -வரை
விண்முட்டும் சீர்திரு மலைநாடு
மானினம் வாழ்முல்லை வளக்காடு -வயல்
வன்னியும் எங்களின் மண்ணாகும்

முத்துக்கள் விளைகடல் மன்னாரும் -தம்பி
முத்தமிழ் புலமைசேர் யாழ்நாடும்
சொத்தென நிறைபுகழ் தமிழீழம் (2)-இதில்
தொல்லைகள் மேவினால் என்னாகும்

சிங்களர் காலடி படலாமோ -ஈழம்
சீர்கெட தமிழர்கள் விடலாமோ
சொந்த மண் அழிந்ததன் பின்னாலே(2) -பிறர்
சோற்றுக்கு வாழ்வதோ வாழ்வாகும்

கொலையோடு கொள்ளைகள் செய்வார்கள் -பெரும்
குண்டினை மழையென பெய்வார்கள்
தலையோடு மனைகளும் பாழாக(2) -தீயில்
கருக்குவர் ஒவ்வொரு நாளாக

தாயகம் மீட்டிட நீயோடு -பிரபா
தானையில் சேர்ந்தொரு புலியாகு
போயினி செருவினில் விளையாடு (2)-தமிழ்
பூத்திட புதியதோர் புறம்பாடு
புறம்பாடு.. புறம்பாடு.. புறம்பாடு....

எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா

குரல் - பாடகர் சாந்தன்

எம்மண்ணில் எதிரிகள் அடியற்ற சுவடா
தமிழ்மக்கள் அறிவென்ன சாலமே குருடா
தன்தாயை விற்றிட்ட கொடியோர்கள் வாழவா
தலைவனின் ஆணைகொள் புலியே நீ ஆளவா

போடு போடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

சங்கத்தமிழ் கண்டோன் தமிழ்வீரன் அல்லனா
இமையத்தில் புலிநட்டோன் தமிழ்வீரன் அல்லனா
ஈழத்தை மீட்பவன் தமிழ்வீரன் அல்லனா
இனிவேறு புறமொன்று நானிங்கு சொல்லவா

போடுபோடு வீரநடைபோடு
வெல்வோம் வெல்வோம் வீரநடைபோடு (2)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
மானமிருந்தால் தானே வாழ்வு (2)

ஓட்டிகளே படகோட்டிகளே

குரல் - மாவீரன் மேஜர் சிட்டு
கடலில் புலிகளுக்காகப் படகோட்டி,
கொல்லப்பட்ட படகோட்டிகள் நினைவாக எழுந்த பாடல்.

ஓட்டிகளே படகோட்டிகளே -எங்கள்
உணர்வினுக்கே வழிகாட்டிகளே

வானில் நிலாவரும் காலத்திலும் - கரும்
மேகம் உலாவரும் நேரத்திலும் -குளிர்
வாடையடிக்கின்ற காலத்திலும் -புயல்
வந்து அழிக்கின்ற நேரத்திலும்
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

ஆயுதங்கள் கொண்டு தந்தீரே -ஏதும்
ஆகாமல் கரை வந்தீரே - உயிர்
போகாமல் எம்மை காத்தீரே -நாங்கள்
போராட வலு சேர்த்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

சாவுக்கு நீரஞ்சி நிற்காமல் -உங்கள்
தாய்பிள்ளை தாரத்தை எண்ணாமல் -தமிழ்
ஈழத்தின் விடிவிற்காய் வாழ்ந்தீரே -அலை
ஏறும் கடல்மடி பாய்ந்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

Thursday, July 27, 2006

யாரென்று நினைத்தாய் எம்மை

பாடல் எழுதியவர்: மறைந்த கவிஞர் நாவண்ணன்.
பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன்.

யாரென்று நினைத்தாய் எம்மை
ஏன்வந்து அழித்தாய் மண்ணை
போரென்றா எழுந்தாய் வந்து
புலிகாலில் விழுந்தாய் பணிந்து

கண்டிவீதி நீபிடித்து கைகுலுக்கவோ -முன்னர்
ஆண்டிருந்த நிலமுழுதும் நாமிழக்கவோ (2)
தாண்டிக்குளம் மேலே மேகம் இடியிடித்தது -எல்லை
தாண்டிவந்து நின்றவர்க்கு உயிர் துடித்தது

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு
வருவாயா அனுருத்த நம்பி

கொண்டுவந்து ஆயுதங்கள் நீகுவிப்பதோ -நாளும்
குண்டுகளால் எங்கள்தேசம் தீக்குளிப்பதோ (2)
கோபம் கொண்ட வேங்கைள் களங்களாடினர் -தாண்டிக்
குளத்தில் நின்ற பகைவர்கள் பிணங்களாயினர்

பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு
வருவாயா அனுருத்த நம்பி

திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன்

10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.

திருவுடலில் வெடிசுமந்து நிதன் எழுந்தவன் -எங்கள்
சாதுரியன் யாழினியும் உயிர் கொடுத்தனர்
பெருவிழியில் கனல்சுமந்து இவர் நடந்தனர் -தாண்டிக்
குளமிருந்த பகைமுடித்து இவர் விழுந்தனர்

நெருப்பென நிமிர்ந்தவர் இருப்பது அழித்திட
எழுந்தவர் படையினை உடைத்தனர் -உயர்
கரும்புலியாகியே களத்திடை ஆடியே
கயவர்கள் தங்ககம் தகர்த்தனர் -வெடி
மருந்துடன் தம்முடல் வெடித்தனர்

சந்ததி காத்திட கந்தகம் சுமந்திவர்
சாவினை நெஞ்சினில் -இவர்
சந்தன மேனிகள் வெந்திடும் போதிலே
சிந்தையில் தலைவனை நினைத்தனர்
தமிழ் தேசத்தின் புயலென நிலைத்தனர்

quelle-eelapadalkal

தம்பி நிதனோடு தங்கை யாழினி

10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.

தம்பி நிதனோடு தங்கை யாழினி -எங்கள்
சாதுரியன் பெயரைச் சொல்லி பாடுநீ

பொங்கிக் கரும்புலிகளாகி வெடிகளானவர் -பிற
பெரிய நெருப்பாகி எரிந்துபோனவர்

வன்னிமண்ணை சிறைபிடிக்க எண்ணிவந்த பகைவனுக்கு
வாசலிலே விழுந்ததடா முதலடி -தலைவன்
சொன்னபடி கரும்புலிகள் மின்னலென பாய்ந்து -ஜெய
சிக்குறுக்குக் கொடுத்த அடி பதிலடி

செந்தமிழர் வீதியிலே வந்துநின்ற எதிரிகளை
தேடித்தேடி அடிகொடுத்தார் யாழினி -எங்கள்
தம்பி நிதனோடு பொங்கி சிங்களத்துப் படைகளுக்கு
சாதுரியன் அடிகொடுத்தான் பாடுநீ

கரியவேங்கை வெடிசுமந்து திரியும்வரை பகைவனது
கால்கள் இந்த மண்ணில் படமாட்டுதே -இங்கு
விரியும் சிறு மலர்கள்கூட கரியபுலியாகி நின்று
விடுதலைக்க ஒளிகொடுத்துக் காட்டுமே

Quelle - eelapadalkal

Wednesday, July 26, 2006

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று

குரல் - திருமலைச்சந்திரன்
'மறைமுகக் கரும்புலிகள்' பற்றிய ஒரு பாடல்

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து
வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று
வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று
வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று

தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம்
வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம்
வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி
நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை
விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை
சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள்
சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள்
வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை
காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை

மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள்
மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது
வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த
செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு
வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா

பாடல்வரிகள் - புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு - முரளி.


ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளி வந்த பாடல். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல்.

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா
ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா -இப்போ
ஆனையிறவு எங்களிடம் நந்தலாலா

எந்த மாதிரி அட அந்தமாதிரி
எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ்
ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி
சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -எதோ
தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி
இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட
சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி

ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ
உள்ளதையும் தந்து போறா நந்தலாலா
மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப
மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா

அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ
ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா
அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள்
அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா

இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ
இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா
எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள்
தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா

Tuesday, July 25, 2006

அடைக்கலம் தந்த வீடுகளே

குரல்: மலேசியா வாசுதேவன்
இசை: தேவேந்திரன்
இசைத்தட்டு: களத்தில் கேட்கும் கானங்கள்

இராணுவ முற்றுகைக்குள்ளும் சுற்றிவளைப்புக்குள்ளும் தங்களைப் பொத்திப் பாதுகாத்தவர்ககளிடமிருந்து விடைபெறும் போது புலிவீரன் பாடுவதாக அமைந்த பாடல்.

அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்
அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்
கதவு திறந்தீர்களே -எம்மை
தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி
பார்க்க மறந்தீர்களே
பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி
உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்
தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா
நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த
இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்
முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்
சிறகால் மறைத்தீர்களே
சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே...

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன்

மறைமுகக் கரும்புலிகள் பற்றிய பாடல்

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு
வாழும் தலைமுறை சாகும் கரும்புலி
வாழ்வை அறிவதுமில்லை -இவர்
வாசம் புரிவதுமில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு
தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்
மூச்சும் பெரும் புயலாகும்.

காந்தரூபன் வாழுகின்ற கடலிது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடத்திய காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகியோரையும், அதன்பின் வேறொரு தாக்குதலில் வீரச்சாவடைந்த சிதம்பரம், ஜெயந்தன் ஆகியோரையும் நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடல். நெய்தல் இசைநாடாவில் இடம்பெற்றது இப்பாடல். 1991ஆம் ஆண்டு (10.07.1990) முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

காந்தரூபன் வாழுகின்ற கடலிது
கொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இது
நீந்தி வினோத் ஆடிநின்ற அலையிது
ஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்கு
விலையேது விலையேது

புதிய வரலாறு எழுதும் புலிவீரர்
புகழை உலகெங்கும் கூவு -அவர்
உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி
உரத்த குரலெடுத்து பாடு பாடு பாடு

எதிரி வருவானா கரையைத் தொடுவானா
என்று புயலாகி நின்றோம் -புலி
அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும்
அணியில் துணையாகி வென்றோம்
உலகத் திசையாவும் தமிழன் அரசாளும்
நிலைமை வருமிங்கு ஒருநாள் -கடல்
புலிகள் படைசென்று பகைவர் படைவென்று
புலரும் தினமன்று திருநாள்

கடலின் கரையோரம் தலைவன் உருவாகி
கால்கள் நடைபோட வந்தான் -பெரும்
தடைகள் எதுவந்த போதும் அவன்காலில்
உடையும் எனச்சொல்லி வென்றான்
பூவும் புயலாகி பாயும் புலியாகி
போரில் குதித்துள்ள நாடு -தமிழ்
ஈழம் உருவாகும் வேளை இதுவாகும்
என்று களம்நோக்கி ஓடு

மறவர் படைதான் தமிழ்ப்படை

வரிகள் : காசி ஆனந்தன்

மறவர் படைதான் தமிழ்ப்படை -குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்
வெல்வார் என்பது வெளிப்படை

புதிதோ அன்று போர்க்களம் -வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் -கவி
பாடிமுடிப்பார் மங்களம்

சிரிக்கும் உள்ளம் போர் கண்டு -தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு -என
துள்ளும் நாக்கும் இருதுண்டு

தமிழன் பண்பில் உருப்படி -அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையம் தன்னை முதற்படி -பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு -நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு -கண்
சிவந்து நின்று போராடு