Monday, May 29, 2006

ஆண்டாண்டு காலமதாய் நாம்

பாடியவர் - குட்டிக் கண்ணன்
இசை - தமிழீழ இசைக்குழு
வரிகள் - முல்லைச்செல்வன்

ஆண்டாண்டு காலமதாய் நாம்
ஆண்டு வந்த பூமி
அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி
சுத்தி வந்த வீதி
எங்கள் அக்கா அண்ணையரே
எதிரி இங்கு வரலாமா
எங்கள் மண்ணை ஆள நினைச்சா
வேங்கை நாங்க விடலாமா

(ஆண்டாண்டு)

வீட்டுக்கொரு வீரன் போனா
விடுதலையும் நாளை வரும்
வீதியிலே சுத்தித் திரிஞ்சா
அடிமையாகச் சாக வரும்
ஆட்டம் போடும் ராணுவங்கள்
அலறி ஓடணும் . நாம்
அடிமை இல்லை என்று புதிய
பரணி பாடணும்

(ஆண்டாண்டு)

எங்கள் வேங்கைத் தலைவன் தானே
எங்களுக்கு வழிகாட்டி
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடுவோம் தீ மூட்டி
பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு
புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு

(ஆண்டாண்டு)

என்னினமே என் சனமே
இன்னும் என்ன மயக்கமா
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடவே தயக்கமா
பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை
பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா

(ஆண்டாண்டு)

Sunday, May 28, 2006

அடிபணிந்து வாழ்வதோ ...

வரிகள் - முல்லைச்செல்வன்
பாடியவர் - தேவா சங்கர்
இசை - தமிழீழ இசைக்குழு

அடிபணிந்து வாழ்வதோ
முடிவணங்கி வீழ்வதோ
துடிதுடிக்கும் கரங்கள் இங்கு
துவண்டு கிடப்பதோ...
முடிவெடுக்கும் மனங்கள் இங்கு
மருண்டு தவிப்பதோ...

(அடிபணிந்து)

எதிரி உடல் இரும்பா - உன்
இதயம் என்ன துரும்போ - சொல்
உயிரும் என்ன கரும்பா - நீ
உணர்ந்து பாரு தமிழா
போன காலங்கள் போகட்டும் - இனி
புதிய வரலாறு படைப்போம்
எழுந்திடு துணிந்திடு போர் புரிந்திடு

(அடிபணிந்து)

கையில் என்ன விலங்கா - நீ
காட்டில் வாழும் விலங்கா - சொல்
வையகத்தில் கலங்கா நீ
வாடலாமோ தமிழா
வீர வரலாறு படைத்திடும் - நம்
வேங்கை அணியோடு இணைவேம்
வெற்றித் திருநாடு அமைத்திட - நாம்
யுத்த களமாடி ஜெயிப்போம்
எழுந்திடு துணிந்திடு போர் புரிந்திடு

(அடிபணிந்து)

Saturday, May 20, 2006

புலியொரு காலமும் பணியாது

வரிகள்: பொன். கணேசமூர்த்தி
பாடியவர்: மேஜர் சிட்டு

இப்பாடல் யாழ்ப்பாணம் சிங்களப்படைகளிடம் இழக்கப்பட்ட காலத்தில் வெளிவந்தது.

புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது
திசைமாறிடுமோ ஒளிரும் சூரியன்
அலையாதிடுமோ கிடையாது -எங்கள்
நிலைமாறிடுமோ நடவாது

எல்லை தாண்டி வந்து உருவாகும் -பகை
எம்மை ஆளவென்று சதிபோடும்
முள்ளை மலரென்று கதைபேசும் -சில
மந்திகள் கொடிதாவும்
கொட்டிலுக்கு கூரையில்லை
கொண்டுவந்த தேதுமில்லை
கட்டுதற்கு ஆடையில்லை
மானமின்னும் சாகவில்லை.

பட்டினிக்கு வட்டியில்லை
வாவா... -இனி
குட்டநின்று வாழ்வதில்லை வாவா.

பகைவந்து பிடித்தது சுடுகாடு -அதைப்
பறிப்போம் திடமாய் நடைபோடு
மறுபடி செய்வோம் பூக்காடு -வெள்ளி
மலந்திடும் கூத்தாடு
நாம் பிறந்த ஊருமில்லை
நட்டுவந்த தேதுமில்லை
ஆதரவுக்காருமில்லை
ஆறுதற்கு நேரமில்லை

ஓருயிர்தான் யாவருக்கும்
வாவா... -இனி
சாவதேனும் ஓய்வதில்லை வாவா.

கண்ணில் பாய்கிறது நீரோட்டம் -தமிழ்
களத்தில் கயவரது தேரோட்டம்
மண்ணில் நடத்துறோம் போராட்டம் -புலி
மறுபடி கொடியேற்றும்
பள்ளியில்லை தேதியில்லை
சொல்லியள யாருமில்லை
உள்ளமின்றி மிச்சம் இல்லை
உயிர்துறக்க அச்சம் இல்லை

போரெடுத்து வெல்வதற்கு
வாவா... -எங்கள்
ஊர்பிடித்துச் செல்வதற்கு வாவா.

சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்

குரல்கள் : மேஜர் சிட்டு, சுகுமார்

யாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது.

சின்ன சின்ன கூடுகட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்
தென்னிலங்கைப் பேய்களினால்
நாமிருந்த கூடிழந்தோம்
கண்களிலே நீர்வழிய
காலெடுத்து நாம் நடந்தோம்
செம்மணிக்கு வந்தபின்னும்
செய்வதறி யாதிருந்தோம்

விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள்
தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது

வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள்
வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும்
எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ்
ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே

வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம்
வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம்
பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள்
பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம்

எழடா எழடா இனியும் குனிவாய்
எனிலோ அழிவாய் தமிழா
வருவாய் வருவாய் புலியாய் வருவாய்
எனிலோ மகிழ்வாய் தமிழா

எமதூர் முழுதும் அழிவான் பகைவன்
படையாய்த் தமிழா எழடா
பிரபாகரன் படையாய் நிமிர்வாய்
வருவாய் தமிழா உடனே


Quelle - வன்னியன்

கடலின் காற்றே கடலின் காற்றே

பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், மேஜர் சிட்டு.
இசை: முரளி


இது கொழும்புத் துறைமுகத்தில் 1996 ஆம் ஆண்டு கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

கடலின் காற்றே கடலின் காற்றே
எரியும் புலியைத் தழுவிவிடு
உயிரைக் கரைக்கும் புலிகள் மூச்சை
கரையை நோக்கி உலவவிடு

குனியாது கடல்வேங்கை ஒருநாளும் -வைத்த
குறியேதும் தறவாது இடிவீழும்
பணியாது தமிழ் ஈழம் போராடும் -எங்கள்
பகைமீது இனிமேலும் இடிவீழும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


ஊரிலிருந்து வேரையறுத்து
உறவைக் கலைத்த முகத்திலே
காறியுமிழ்ந்தேறி மிதித்தார்
அவர்கள் துறை முகத்திலே
கரிய புலிகள் இனியும் புதிய
சரிதம் எழுதும் பொழுதிலே
கடலின் புலிகள் படகில் எழுந்தார்
பகைவன் சாவின் விளிம்பிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

தலைவன் காட்டும் வழியில் நடந்து
கடலின் வேங்கை விரைந்திடும்
தமிழர் தேசம் விடியும் வரையும்
கரிய புலிகள் உருகிடும்
உலகம் முழுதும் புருவம் உயர
கடலின் புலிகள் நடந்திடும்
தமிழன் நிலத்தை அழிக்கும் பகைவன்
உயிரை புலிகள் குடித்திடும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும்
குகையில் வீழ்ந்த ஒரு அடி
குளறக் குளறக் கடலின் புலிகள்
கொழும்பில் இடிக்கும் பலஇடி
கடலின் புலிகள் எழுவார் எனிலோ
திசைகள் முழுதும் காலிலே
இனிமேல் அதிரும் வெடிகள் முழுதும்
பகைவன் ஊரின் தோளிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


Quelle - வன்னியன்

Friday, May 19, 2006

போரம்மா... உனையன்றி யாரம்மா

இப்பாடல் பார்வதி சிவபாதம், குமாரசாமி ஆகியோரின் குரல்களில் வெளிவந்த பாடல். இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது


போரம்மா
உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்
ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்
ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்
ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு
வீசும் காற்றின் வேகம் கொண்டு
மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா
மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்
மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு
விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி
ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா