10.06.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினரின் தாண்டிக்குளம் படைநிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவடைந்த கரும்புலிகளான மேஜர் நிதன், கப்டன் சாதுரியன், மேஜர் யாழினி ஆகியோரின் நினைவாக வெளிவந்த பாடல்.
தம்பி நிதனோடு தங்கை யாழினி -எங்கள்
சாதுரியன் பெயரைச் சொல்லி பாடுநீ
பொங்கிக் கரும்புலிகளாகி வெடிகளானவர் -பிற
பெரிய நெருப்பாகி எரிந்துபோனவர்
வன்னிமண்ணை சிறைபிடிக்க எண்ணிவந்த பகைவனுக்கு
வாசலிலே விழுந்ததடா முதலடி -தலைவன்
சொன்னபடி கரும்புலிகள் மின்னலென பாய்ந்து -ஜெய
சிக்குறுக்குக் கொடுத்த அடி பதிலடி
செந்தமிழர் வீதியிலே வந்துநின்ற எதிரிகளை
தேடித்தேடி அடிகொடுத்தார் யாழினி -எங்கள்
தம்பி நிதனோடு பொங்கி சிங்களத்துப் படைகளுக்கு
சாதுரியன் அடிகொடுத்தான் பாடுநீ
கரியவேங்கை வெடிசுமந்து திரியும்வரை பகைவனது
கால்கள் இந்த மண்ணில் படமாட்டுதே -இங்கு
விரியும் சிறு மலர்கள்கூட கரியபுலியாகி நின்று
விடுதலைக்க ஒளிகொடுத்துக் காட்டுமே
Quelle - eelapadalkal
Thursday, July 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment