Sunday, July 30, 2006

ஓட்டிகளே படகோட்டிகளே

குரல் - மாவீரன் மேஜர் சிட்டு
கடலில் புலிகளுக்காகப் படகோட்டி,
கொல்லப்பட்ட படகோட்டிகள் நினைவாக எழுந்த பாடல்.

ஓட்டிகளே படகோட்டிகளே -எங்கள்
உணர்வினுக்கே வழிகாட்டிகளே

வானில் நிலாவரும் காலத்திலும் - கரும்
மேகம் உலாவரும் நேரத்திலும் -குளிர்
வாடையடிக்கின்ற காலத்திலும் -புயல்
வந்து அழிக்கின்ற நேரத்திலும்
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

ஆயுதங்கள் கொண்டு தந்தீரே -ஏதும்
ஆகாமல் கரை வந்தீரே - உயிர்
போகாமல் எம்மை காத்தீரே -நாங்கள்
போராட வலு சேர்த்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

சாவுக்கு நீரஞ்சி நிற்காமல் -உங்கள்
தாய்பிள்ளை தாரத்தை எண்ணாமல் -தமிழ்
ஈழத்தின் விடிவிற்காய் வாழ்ந்தீரே -அலை
ஏறும் கடல்மடி பாய்ந்தீரே
படகோட்டிய ஓட்டிகளே -எமை
ஏற்றிய ஏணிகளே...

No comments: