Sunday, May 28, 2006

அடிபணிந்து வாழ்வதோ ...

வரிகள் - முல்லைச்செல்வன்
பாடியவர் - தேவா சங்கர்
இசை - தமிழீழ இசைக்குழு

அடிபணிந்து வாழ்வதோ
முடிவணங்கி வீழ்வதோ
துடிதுடிக்கும் கரங்கள் இங்கு
துவண்டு கிடப்பதோ...
முடிவெடுக்கும் மனங்கள் இங்கு
மருண்டு தவிப்பதோ...

(அடிபணிந்து)

எதிரி உடல் இரும்பா - உன்
இதயம் என்ன துரும்போ - சொல்
உயிரும் என்ன கரும்பா - நீ
உணர்ந்து பாரு தமிழா
போன காலங்கள் போகட்டும் - இனி
புதிய வரலாறு படைப்போம்
எழுந்திடு துணிந்திடு போர் புரிந்திடு

(அடிபணிந்து)

கையில் என்ன விலங்கா - நீ
காட்டில் வாழும் விலங்கா - சொல்
வையகத்தில் கலங்கா நீ
வாடலாமோ தமிழா
வீர வரலாறு படைத்திடும் - நம்
வேங்கை அணியோடு இணைவேம்
வெற்றித் திருநாடு அமைத்திட - நாம்
யுத்த களமாடி ஜெயிப்போம்
எழுந்திடு துணிந்திடு போர் புரிந்திடு

(அடிபணிந்து)

No comments: