வரிகள் : காசி ஆனந்தன்
மறவர் படைதான் தமிழ்ப்படை -குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்
வெல்வார் என்பது வெளிப்படை
புதிதோ அன்று போர்க்களம் -வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் -கவி
பாடிமுடிப்பார் மங்களம்
சிரிக்கும் உள்ளம் போர் கண்டு -தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு -என
துள்ளும் நாக்கும் இருதுண்டு
தமிழன் பண்பில் உருப்படி -அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையும் தன்னை முதற்படி -பிறர்
அடக்க வந்தால் செருப்படி
வீரம் வீரம் என்றாடு -நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு -கண்
சிவந்து நின்று போராடு
Tuesday, July 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment