Saturday, November 25, 2006

மாமலையொன்று மண்ணிலேஇன்று

26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: அக்கினிச் சுடர்கள்.


மாமலையொன்று மண்ணிலே இன்று
சாய்ந்ததை தாங்குமோ நெஞ்சு
தாய்மனம்ஒன்று சங்கரென் றிங்கு
வாழ்ந்ததை மறக்குமோ நெஞ்சு

சேதனை தாண்டி வந்தாடிய வானர
காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர்
சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின்
தலைவனை தாங்கிய தோழன்

முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள்
முதலோனின் நிழலாகி உறவாடினாய்
விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன்
விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய்
விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள்
தலைவனுக் குயிர் எனும் உறவு

பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த
புயலுக்கும் அசையாத மலையாகினாய்
பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான்
படையேறும் கனவோடு உயிர் போக்கினாய்
அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ
அதன்மேலே போட்டானே நெருப்பு

அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம்
அதிகாலை எனவாகும் பொழுதாகினாய்
ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ்
உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய்
நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை
நெருப்பினில் பகைவிழும் உறுதி

No comments: